Monday, February 7, 2011

விபத்து கரவெட்டி பிரதேச செயலகத்தின் முன்னால்

யாழ். கரவெட்டியில் விபத்து: குடும்பஸ்தர் பலி

யாழ்.கரவெட்டி பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இருந்து கரவெட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று பிரதேச செயலகத்துக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் மீது மோதியது.

எஸ். துரைராசா (வயது-40)  என்பவரே சம்பவ இடத்தில் பலியானவர் ஆவார்.நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவ்விபத்து சம்பந்தமான விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்
 

இத்தாலியில் வாகன விபத்து

இத்தாலியில் வாகன விபத்து, இலங்கையர் நால்வர் காயம்



இத்தாலியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையர் நால்வர் காயம் அடைந்து உள்ளனர்.

தலைநகர் ரோமாபுரியை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று இவர்களின் ஜீப் மீது மோதியது.


இவர்களது ஜீப் சாரதி படுகாயம் அடைந்து உள்ளார்.

ஐவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்

.பருத்தித்துறையில் பொலிஸாரால் மிரட்டல்!

ஜே.வி.பியின் பெண் வேட்பாளருக்கு யாழ்.பருத்தித் துறையில் பொலிஸாரால் மிரட்டல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபைக்கு போட்டியிடுகின்ற ஜே.வி.பி கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரால் நேற்று மிரட்டப்பட்டு உள்ளார்கள்.

தவராசா புஷ்பராணி என்கிற வேட்பாளரே மிரட்டப்பட்டு இருக்கின்றார்.பொலிஸார் சீருடை அணிந்து கொண்டு இவரின் வீட்டுக்கு வந்து இருக்கின்றார்கள்.இவருக்கும், ஜே.வி.பி கட்சிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துக் கேள்விக் கணைகளை தொடுத்தார்கள்.