Friday, January 14, 2011

15-01-2011

நண்பர்கள் அணைவருக்கும் என் இனிய தித்திக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்
124
மதி நிறை மார்கழித் திங்கள்
மறையத் துவங்க...
தையலெனும் தைமகள்
தலை நிமிர்ந்து வருகிறாள்...

தமிழர்களின் உளம் மகிழ வருகிறாள்...

தமிழர்த் திருநாள் போற்ற வருகிறாள்..!
வரவேண்டும்...
வர(ம்)வேண்டும் தமிழ்ப்பெண்ணே
உமை வேண்டி பாடுகிறேன்
தமிழ்ப்பண்ணே..!

நூறு கிலோ அரிசி மூட்டையைச்

சுமப்பவனால்
நல்ல அரிசி ஒரு கிலோ
வாங்கிச் சாப்பிட வழியில்லை..!
ஒரு கிலோ நல்லரிசி வாங்கி
உண்பவனால்
நூறு கிலோ அரிசி மூட்டையைச்
சுமக்க வக்கில்லை..!

பட்டாடை நெய்கின்ற நெசவாளரால்

சிறுபட்டாடை வாங்கியணிய வசதியில்லை
பட்டு வாங்கும் பணக்காரர்களுக்கு
நெசவாளர் நலனறியப் போவதில்லை..!

போதுமிந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

எல்லோரும் எல்லாமும் பெற
வறியோர்கள் உடையோர்கள் எனும்
ஏற்றத் தாழ்வு மறைய... 
தமிழான தைமகளே தயை புரி..!

ஈழத்து மண்ணில் எம்மக்கள்

இருக்கின்ற இரும்புச்சிறையினை
இருக்குமிடமில்லாமல் செய்..!
உலகத்து தமிழரெல்லாம்
ஒன்றுபட்டு நிற்கும் நிலையினை
இப்புவிதனில் மலரச் செய்..!

அனைவரின் நெஞ்சிலும்

அன்பை விதைத்து...
தீவிரவாதத்தை தீயிட்டழித்து
உயிர் வதையினை உருத்தெரியமலழித்து
உலகெங்கும் அமைதியை பரவச் செய்..!

வியர்வையை உடலில் வரைபடமாக்கி

உழைக்கின்ற பாட்டாளி வர்க்கமும்
வியர்வையை நிலத்தில் நெல்மணியாக்கும்
உயர்ந்த என்னுழவர் வர்க்கமும்
வாழ்வாங்கு வாழ தைமகளே வழி செய்..!

இது தான் காதல் என்பதா…? - காதல்



நிழலாய் நீ வருவாய் என
தினம் வெயிலில நடந்தேன்
நான்……….!
குடையாய் நீ வருவாய் என
மழையில் நனைந்தேன்
நான்……….!
இது தான் காதல் என்பதா…!


உன்னோடிருக்கும் தருனங்கள்
சுகங்களானது……….!
உன்னை நீங்கியிருக்கும் தருனங்கள்
சுமைகளானது……….!
இது தான் காதல் என்பதா…!


யார் வந்து பேசினாலும் உன்
குரலே கேட்கிறது…………..!
யார் முகம் பார்த்தாலும் உன்
முகமே தெரிகிறது…………...!
இது தான் காதல் என்பதா…!


சுகமாய் நினைத்தவை இன்று
சுமையானது போல் சுகமாய்
நினைக்கும் உன் நினைவுகள்
என்றும் சுகமானதே…………!
 
காய்ந்த சருகாக!
*******************

மலருமுன்னே
ஓர் மொட்டு
கண் முன்னே
காய்ந்த சருகாக!

பசி என்னும்

கொடிய மிருகம்
வாட்டி வதைக்க
பட்டினியில் போராடி…
நோயில் வாடி வதங்கி…

தலை நிமிர்ந்து
நடக்கத் தஞ்சமின்றி
தலை கவிழ்ந்து
பரிதாபமாய்…

கொத்திச் செல்வதற்காய்
கொடிய கழுகும்
அருகே காத்திருப்பு!

கண்காணாத கடவுளுக்காய்
பாலால் அபிசேகம்!

காச்சிப் படைத்து
அடிக்கடி அன்னதானம்!

ஆனால்
கண்முன்னே
காணும் வறுமைக்கு
கை கொடுக்க
ஏனோ மனம் வருவதில்லை…?124
அதிசயப் பிறவியோ நீ…?
***************************

கனவுகளைச் சுமந்த
உன் விழிகளுக்கு
கண்ணீர்
பரிசாய்க் கிடைத்த போதும்….

இடி விழுந்து
இதயமே நொருங்கி
அடியோடு சாய்ந்து விழும்
மலை போல் ஓர் சோகம்
உன்னைத் தாக்கியிருக்க…

ஒரு நொடி கூட
இடிந்து போகாமல்
இடி தாங்கி போல் தாங்கி
உன் இதயத்தைக் கல்லாக்கி
ஒடிந்து போய் விடாத
உன் திடம் கண்டு
எனக்குள்ளே ஓர் வியப்பு!

எப்படி? … எப்படி?
உன்னால் மட்டும்
இப்படி இருக்க முடிகிறது…?

துயரங்களைத் துச்சமாய்
தூக்கி எறிந்து விட்டு
இந்த வாழ்க்கையை - நீ
அற்புதமாய் ரசிப்பதைக் கண்டேன்.

வாழ்க்கை ஓர்
நந்தவனம் என்கின்றாய்!

பூக்களை
புனிதமாய் நேசிக்கின்றாய்!

இந்த இயற்கையை
அணுவணுவாய் ரசிக்கின்றாய்!

எப்போதும்
உன் சிரிப்பெனும் சங்கீதத்துடன்
வலம் வரும் நீ
இப்படியே வாழவேண்டும்.

ஆனாலும்
இதெப்படி உன்னால் முடிகிறது...?
எனக்கும் சொல்லிக்கொடேன்.

அடடா!...
ஒருவேளை
ஆண்டவனால் படைக்கப்பட்ட
அதிசயப் பிறவியோ நீ...?

27 – அதிசயக் காதல்



அடிக்கடி
உன் முகத்தின் முகவரியை
அசைபோட்டுப் பார்க்கிறேன்!
பார்ப்போர்
எல்லோர் மீதும்
பாசம் வருவதில்லை!
கண்ணில்
காண்போர் எல்லோர் மீதும்
காதல் வருவதில்லை!
ஆனால் எப்படி
உன்மீது மட்டும்
இப்படி ஒரு காதல்!
என் இதயக் கோயிலில்
காதல் வேதங்கள் ஓதப்பட…
தென்றல் தெம்மாங்கு பாடி
ஊருக்கு அஞ்சல் செய்கிறது!
உன் வாசனைகள்
எனைக் கடந்து செல்கிறது!
ம்…!

இதயத்தின்
ஒவ்வொரு அறைகளிலும்
உன் முகம் பதிகிறது!
தாலாட்டும் பூங்காற்றாய்
தழுவிச் செல்லும்
உன் நினைவால்…
என் அனுமதிகள் எதுவுமின்றி
கற்பனை நான்கு திசைகளிலும்
எட்டிப் பார்க்க…
மௌனமாய் கருத்தரித்து
விரல் வழி பிறந்து
வழியும் கவிதைகளை
விடிய விடிய
எழுதி முடிக்கிறேன்!
நெஞ்சினில் அன்பையும்
கண்களில் காதலையும்
உள்ளே தேக்கி வைத்து
தளிர் விட்ட காதலை
உன்னிடம் சொல்லி விட…
கற்பனையாய்
ஆயிரம் கவிதைகள்!
கண்ணாடி முன்
ஆயிரம் ஒத்திகைகள்!
இருந்தும் என்ன பயன்…?
உன்னைக் கண்டவுடன்
உயிரெழுத்து எது
மெய்யெழுத்து எது
எதுவுமே தெரியவில்லை!
எத்தனை மொழிகள்
எனக்குத் தெரிந்திருந்தும்
அத்தனை மொழியையும்
மொத்தமாய் மறந்து
ஒரு மொழியும் தெரியாத
பிஞ்சுக் குழந்தையாய் என் காதல்!
ம்ம்…!

இது அதிசயக் காதல்தான்
124