Friday, January 14, 2011

இது தான் காதல் என்பதா…? - காதல்



நிழலாய் நீ வருவாய் என
தினம் வெயிலில நடந்தேன்
நான்……….!
குடையாய் நீ வருவாய் என
மழையில் நனைந்தேன்
நான்……….!
இது தான் காதல் என்பதா…!


உன்னோடிருக்கும் தருனங்கள்
சுகங்களானது……….!
உன்னை நீங்கியிருக்கும் தருனங்கள்
சுமைகளானது……….!
இது தான் காதல் என்பதா…!


யார் வந்து பேசினாலும் உன்
குரலே கேட்கிறது…………..!
யார் முகம் பார்த்தாலும் உன்
முகமே தெரிகிறது…………...!
இது தான் காதல் என்பதா…!


சுகமாய் நினைத்தவை இன்று
சுமையானது போல் சுகமாய்
நினைக்கும் உன் நினைவுகள்
என்றும் சுகமானதே…………!
 

No comments:

Post a Comment