Wednesday, April 20, 2011

யாழ்ப்பாணம் நீர்வேலியில் கத்தி வெட்டு



இன்று மாலை 5 மணிக்கு நீர்வேலி வடக்கில் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவருடைய வளர்த்த கோழிகள் தன்னுடைய வீட்டு காணிக்குள் வந்ததற்கு கோழி உரிமையாளருடன் வாய்த்தற்கம் ஏற்பட்டு வீட்டு காணி உரிமையாளர் தன்னிடம் இருந்த கத்தியால் கோழி வளர்த்த உரிமையாளருக்கு ஓங்கி கத்தியால் வெட்டியதால் அவருடை...ய நெஞ்சுப்பகுதியில் கத்தியின் கூர் குத்தி கிழித்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது..உடனடியாக கோப்பாய் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

( பயன்படுத்தப்பட்ட கத்தியின் படம்)



 இதேவேளை கத்தியால் வெட்டியவருக்கு அங்குள்ள மக்களால் நல்ல தாக்குதல் நடத்தப்பட்டது. இவர் மது போதையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது வெட்டப்பட்டவர் கோப்பாய் வைத்திய சாலையில் இருந்து Ampulance முலம் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 வெட்டியவர் உடுப்பிட்டிக்கு தப்பி ஓடுவதற்கு நீர்வேலி சந்தியில் நின்ற போது இங்குள்ள இளைஞ்ஞர்களால் அவ்விடத்துக்கு சென்று பிடிக்கும் போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற இராணுவத்தினராலும் சுற்றி வளைத்து பிடக்கப்பட்டார் உடனடியாக அவ்விடத்துக்கு சென்ற பொலிசார் அவரைக்கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு பிடித்து சென்றுள்ளார்கள

யாழ் குடாவில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு: வெளியில் நடமாட முடியாத நிலை

யாழ. குடாவில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தை விட மேலும் இவ்வருடம் பல மடங்கு அதிகரித்திருப்பதாக யாழ். பெண்கள் சமூக அபிவிருத்தி நிறுவனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது


யாழில் பாடசாலைப் பெண் பிள்ளைகள் பின்தங்கிய கிராமங்களில் மிகவும் துன்புறுத்தல்களுகக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை யாழில் பின்தங்கிய கிராமங்களில் மீண்டும் தலைதுக்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொறாமைமிக்க ஆண்களினால் பின்தங்கிய கிராமப்புற பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனா. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆண் வர்க்கத்திற்கு எதிராகப் போராடும் குணங்களைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் அத்தோடு பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக சட்டத்தை நாடி தங்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பின்தங்கிய கிராமங்களில் கல்வி பயிலும் பெண்கள் மிகவும் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள