Friday, January 21, 2011

அகதிகள் கப்பலின்

எம்.வி. சன் ஸீ அகதிகள் கப்பலின் பிரதான சந்தேக நபர் உட்பட ஏழுபேர் தாய்லாந்தில் கைது


கனடாவுக்கு 492 இலங்கைத் தமிழ் குடியேற்ற
வாசிகளை ஏற்றிச் சென்ற எம்.வி. சன் ஸீ
கப்பல் பயணத்துடன் தொடர்புடைய முக்கிய
நபர் ஒருவரை தாம் கைதுசெய்திருப்பதாக
 தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
48 வயதான நடேசன் ஜீயநந்தன் என்பவரையும்
 மேலும் 7 பேரையும் கடந்த ஞாயிறன்று மேற்
கொள்ளப்பட்ட முற்றுகையொன்றின்போது
கைது செய்ததாக தாய்லாந்து குடியேற்றத்துறை
 பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 200 இலங்கையர்களை
ஏற்றிச்செல்ல தயாரானபோது வழிமறிக்கப்பட்ட
 கப்பலொன்றின் பின்னணியில் ஜீயநந்தன்
செயற்பட்டதாக தாய்லாந்து அதிகாரியொருவர்
 கூறியுள்ளார் . எனினும் கனேடிய அதிகாரி
யொருவர் இது தொடர்பாக கூறுகையில்,
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா
பகுதிக்கு எம்.வி.சன் ஸீ கப்பலை அனுப்பு
வதற்கு இவர் உதவினாலும் பிரதான
 ஏற்பாட்டாளர் அவரல்ல எனத் தெரிவித்துள்ளார்.
ஏனைய கப்பல்கள் மூலம் குடியேற்ற
வாசிகளை கனடாவுக்கு அனுப்பும் மனிதக்
கடத்தல் பாரிய நடவடிக்கைகளின்
 பின்னாலிருந்தவர் என மேற்படி அதிகாரி
கூறியுள்ளார்
124

  

ஆசிரியையின் சடலம்

புங்குடுதீவு கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் காமல்ப்போயிருந்த ஆசிரியையின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது


நல்லூர் ஆனந்தா வித்தியாலத்தில் ஆசிரியராகக்
 கடமையாற்றிய துரைராஜசிங்கம் உத்தமகுமாரி
(வயது 40) என்ப வருடைய சடலமே புங்குடுதீவு
முனைப்புலவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது
 என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த நவம்பர்
 மாதம் முதல் இவர் காணாமல் போயிருந்தார்
என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில்
காணப்பட்டதால் அதனை அடையாளம்
காண முடியவில்லை. எனினும் கிணற்றில்
 இருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணின்
ஆடைகளைக் கொண்டு உறவினர்கள்
 சடலம் உத்தமகுமாரியுடையது என
அடையாளம் காட்டினர்.உத்தமகுமாரி
 நல்லூர் ஆனந்தாக் கல்லூரியில்
ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தார்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி வழமை
போல் பணிக்குச் சென்ற அவர் பின்னர்
 காணாமல் போயிருந்தார் என்று
உறவினர்கள் கூறுகின்றனர்.
பாடசாலை முடிந்து இரண்டு
மணியளவில் அவர் வெளியேறி
உள்ளதற்கான பதிவுகள் இருந்ததாகவும்
 அவர்கள் கூறினர். அவர் காணாமல்
போனமை தொடர்பாக கோப்பாய்
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட
தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புங்குடுதீவு
முனைப்புலவில் பாழடைந்தகிணறு
ஒன்றினுள் இருந்து அழுகிய நிலையில்
 பெண் ஒருவரின் சடலம் கண்டெடு
க்கப்பட்டது. அதனை மீட்ட பொலிஸார்
, கல்லில் கட்டி கிணற்றினுள் போடப்பட்டிருந்த
அப் பெண்ணின் ஆடைகளையும் மீட்டனர்.
 யாழ். போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டிருந்த ஆடைகளை
உறவினர்கள் நேற்று அடையாளம் காட்டினர்.

124