Thursday, February 3, 2011

சுதந்திர தின வாழ்துக்கள்.

. அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்துக்கள். 

இலங்கையின் 63ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
சுதந்திர தினம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது  விடுமுறையும் , மிட்டாயும் தான். சுதந்திர  தினம் என்றாலே அணைத்து தெரு முனைகளிலும் கோடி ஏற்றி மிட்டாய் கொடுத்து கொண்டாடுவார்கள். சுதந்திர தினம் இப்படி     வந்து ஒரு நாள் விடுமுறை போய் விட்டதே என்று கவலை படுவோர்களுக்கு எனது  வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்


நம் தேசம் கால்களின் கீழும் இருக்கலாம் உயிராகவும் இருக்கலாம் .இந்த சுதந்திர தினத்திளிருந்தாவது  மிட்டாயும் , விடுமுறையும் மட்டும் எண்ணாமல் சுதந்திரத்தின் அர்த்தத்தை அறிந்து கொண்டாடுவோம்.

 

யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய பகுதியில் மனித மண்டை ஓட்டுத் தொகுதி கண்டுபிடிப்பு:

 மேலும் இருக்கலாமென அச்சம்



யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய பகுதிகளில்
தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள்
அப்பகுதியில் மனித மண்டை ஓட்டுத் தொகுதி
 ஒன்றினைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.
 அப்பகுதியில் உள்ள வெளியில் ஆய்வு நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த மனித
 மண்டை ஓட்டுத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது

எனினும் இந்தப் பகுதியில் மேலும் மனித
 மண்டை ஓட்டுத் தொகுதிகள் உள்ளனவா
என்பது தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமது தலைமைக்காரியா
லத்தினரை வரவழைத்துள்ள இலங்கை
 நூதன திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பாக காவற்துறையினருக்கு தகவல்
வழங்கியுள்ளனர்.