Friday, February 4, 2011

நீர்வேலியில் வித்தியாசமான புதுப் பறவை

யாழ்ப்பாணம் நீர்வேலியில் வித்தியாசமான புதுப் பறவை


நீர்வேலிப்பகுதியில் ஆந்தை இனத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படும் அதிசயமான பறவை ஒன்றை பொதுமக்கள் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர்

காகங்கள் கொத்தியதால் வானத்திலிருந்து நிலத்தில் விழுந்திருக்கின்றது . இப்பறவை வெளிநாட்டில் இருந்து பருவகால மாற்றத்தால் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது
தகவல்-'R-அனோராஜ்
                       [124

நீர்வேலியில் சிந்துநடைக்கூத்து விழா

 சிந்துநடைக்கூத்து விழா
 
நீர்வேலியில் காமாட்சியம்பாள்யில் சிந்துநடைக்கூத்து விழா 
 சனிக்கிழமை நடைபெறவுள்ளது
 
 சனிக்கிழமை இரவு 7.00மணிக்கு நீர்வேலி வடக்கு
காமாட்சியம்பாள் சனசமூகநிலைய கலையரங்கில்
 
 . த.பரராஜசிங்கம்  [ J P ]தலைமையில் நடைபெறவுள்ளது.
 
 இந்நிகழ்வில் காமாட்சியம்பாள் ஆலய பிரதமகுரு
 கு.தியாகராஜக்குருக்கள்
ஆசியுரை வழங்குவார்.

இந்நிகழ்விற்கு இனிய விருந்தினர்களாக
*- நாட்டார் வழக்கியல் கழகத் தலைவரும் யாழ்.பல்கலைக்கழக
சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய
 கலாநிதி.த.கலாமணி
*. யாழ். பல்கலைக்கழக கணக்கியற்துறைத் தலைவர். பேராசிரியர்.தி.வேல்நம்பி
*. யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர்
பேராசிரியர். கி.விசாகரூபன்
*. சைவப்புலவர் கலாபூஷணம்
 செ.குணபாலசிங்கம்

*காமாட்சியம்பாள் சனசமூக நிலையத்
தலைவர். வே.மகேந்திரன்
ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் சிறப்புநிகழ்வாக, அண்ணாவியார் கலாபூஷணம் வே.சிதம்பரநாதன்

அவர்களின் நெறியாள்கையில் யாழ். மாவட்ட புகழ்பூத்த முன்னணி நடிகர்கள்
 
 
நகைச்சுவை நாடகக் குழு

பங்கேற்று ஆற்றுகைப்படுத்தும் “காத்தவராஜன் சிந்துநடைக்கூத்து”
இடம்பெறவுள்ளது.
 
  அனுசரணை... சேவாலங்கா மன்றம்                               
                             நோர்வே தூதுவராலயத்தின்
      
தகவல்-'R-அனோராஜ்
                       [124]

நான் எப்படி வெல்வது




மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து
ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..

காதலும் நீயேன வாழ்வும் நீயென
வாழ்க்கையை தொலைத்தேன் வாலிப வயதினிலே...
உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன
உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே..

உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்
காற்றினில் கலக்குதடா காதல் வலி தந்தவனே..


என் கண்ணை பாரடா
என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா
இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே..

ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..
காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா
என் காதலை விட்டு பிரிந்து செல்ல நினைக்கிறாய்..
என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே
சொல்லிவிட்டு போ இல்லை
என்னை கொன்று விட்டு போ..

svr.pamini svr.pamini