Friday, February 25, 2011

காதலை என்னையும் பிடிக்கும்



நீ அங்கு...
நான் இங்கு...

நாம் வாழும் வாழ்க்கையின்
இருப்பிடம் வெவ்வேறு

உணர்வுகள் உளறலாய்
வெளிப்படும் இரவுகள்
கழிவது எவ்வாறு

பறக்கும் இறகினுள்
முகம் மறைத் தழுதிடும்
பறவையைப் பார்த்தாயா...

நானும் அதுபோல்
அழுதுடும் காட்சியைப்
பார்த்தால் ஏற்பாயா...

கானல் நீ....ராகா
வாழ்க்கையில் சேர்வோம்
ஒன்றாகும் நேரம்
கனவிலும் வாழ்வோம்

கரம் பற்றி
நான் அணைப்பேன்
காத லினால்
நீ நனைப்பாய்

உன்னில் வாழும்
நாட்களிலேதான்
உவகை கொள்கின்றேன்

உயிரே உன்னைச்
சேர்வதற்காக
உலகையே எதிர்க்கின்றேன்
 

காதலை பிடித்தால்

 என்னையும் பிடிக்கும்

S .N .P EXPRESS NEERVELY





யாழ்-கொழும்பு 

 


S .N .P  EXPRESS


BY.S.Senkeeran,