Thursday, February 3, 2011

யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய பகுதியில் மனித மண்டை ஓட்டுத் தொகுதி கண்டுபிடிப்பு:

 மேலும் இருக்கலாமென அச்சம்



யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய பகுதிகளில்
தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள்
அப்பகுதியில் மனித மண்டை ஓட்டுத் தொகுதி
 ஒன்றினைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.
 அப்பகுதியில் உள்ள வெளியில் ஆய்வு நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த மனித
 மண்டை ஓட்டுத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது

எனினும் இந்தப் பகுதியில் மேலும் மனித
 மண்டை ஓட்டுத் தொகுதிகள் உள்ளனவா
என்பது தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமது தலைமைக்காரியா
லத்தினரை வரவழைத்துள்ள இலங்கை
 நூதன திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பாக காவற்துறையினருக்கு தகவல்
வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment