Friday, March 11, 2011

உன் நினைவுகளையே

ஏங்கும் இதயம் பற்றி
எழுத்தாணிக்கு கவலையில்லை!!!
இடைமறிக்கும் உன் நினைவுகளையே
எழுதச் சொல்லி துடிக்கிறது…..தாங்குவேன் நானென்று
வெறும் தவிப்புகளையே
பரிசளிக்கிறாய்…..
 
 

ஈரம் கொண்ட
இளஞ்சிவப்பு இதழ்கள்
இரக்கமில்லாத உன் கைகள்
இட்ட வேலியில்
உன் இதயத்துக்கு பக்கத்தில் நான்….
இரவுகளை இழக்க மனமின்றி
இனியவன் துணையின்றி
இம்மியளவும் வாழ்வில் சுவையின்றி
விரகமென்று நிற்கும் போது
விழித்திரை வேர்க்கும் முன்னே
விரதத்தை முடிக்கிறாய்!!!
தூங்காத மனமோ தூயவன்
உனையெண்ணி துடிக்க…
அர்த்த ராத்திரி அனைத்தும்
அமைதி காக்கிறது..
நீ ஆலிங்கனம்
செய்யவேண்டி…


நினைவுகளின் ஈரம்
சுவாசத்தில் காய மறுக்க
அணைக்கும் ஆவேசத்தில்
அர்த்த ஜாமமோ அடுத்த
பொழுதை தர வெறுக்கிறது…
மனதில் காதலோடு
மரத்து போன உடலோடு
வெறுத்து போகுதடா காதல்
கறுத்த இரவும் விடியல் கண்டு….
வெளுத்து விடிகிறதடா?
வேதனையில் துடித்து
விழிக்கிறதடா!!!!!!

No comments:

Post a Comment