திரு ராசன் குணரத்தினம்
தோற்றம் : 10 -02-1943 மறைவு : 24 01-2011
சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசன் குணரத்தினம் அவர்கள் 24-01-2011 திகட்கிழமை அன்று சிறுப்பிட்டியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ராசன் பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா - அன்னம்மா தம்பதியினரின் மருமகனும், கேதீஸ்வரன்(கேதீஸ் - லண்டன்), கஜேந்திரன்(கஜன் - இலங்கை), தவரூபன்(ரூபன் - ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அதுஷன் அவர்களின் அன்பு அப்பப்பாவும்,சத்தியகலா அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற நற்குணராசம்மா, காலஞ்சென்ற நவரட்ணம்மற்றும் தங்கம்மா(அன்ரா - சிறுப்பிட்டி) அவர்களின் அன்புச் சகோதரரும்,செல்வரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியர் - நடராஜலிங்கம் வித்தியாலயம் ( சிறுப்பிட்டி),விசாகநாதன்(சிறுப்பிட்டி) மற்றும் காலஞ்சென்ற யோகாம்பிகை மற்றும் பஞ்சநாதன்(கனடா - ஸ்காபறோ), கமலேஸ்வரி(கனடா - ஸ்காபறோ), மகேஸ்வரி(நீர்வேலி), புவனேஸ்வரி(நீர்வேலி) மற்றும் காலஞ்சென்ற விக்கினேஸ்வரி, மற்றும் மகேஸ்வரி(கனடா - ஸ்காபறோ) ஆகியோரின் மைத்துணரும்,கிருஸ்ணபிள்ளை(நீர்வேலி), கந்தசாமி(கனடா - ஸ்காபறோ) மற்றும் காலஞ்சென்ற பரராஜசிங்கம், காலஞ்சென்ற வைரவநாதன் ஆகியோரின் சகலனும் அன்பு ஆவார். அன்னாரின் ஈமக்கிரிகைகள் 26-01-2011 புதன்கிழமை இராசவீதி சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தகனக்கிரிகைகளுக்காக சிறுப்பிடடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். |
தகவல்- நிரோசன் [மாசிவன் சந்தி] திவாகரன் [சிறுப்பிட்டி மேற்கு] 124 |

No comments:
Post a Comment