Thursday, January 27, 2011

யாழ்ப்பாணத்தில் கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் ஒன்பது பேர் கைது

கோப்பாயில் கைதான ஒருவரே எட்பேரை காட்டித்தந்ததாக பாதுகாப்பு படையதிகாரி தெரிவிப்பு


யாழ்ப்பாணத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுக்களின் 9 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இராணுவ பேச்சாளர் மேஜர் ஜனரரால் உபய மெதவெல இதனை தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் இந்த குழுவின் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஏனைய எட்டு சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.


இதனை அடுத்து கோப்பாய் பிரதேசத்தில் இராணுவத்தினரும், காவற்துறையினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment