Monday, January 17, 2011

18-01-2011

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனின் சடலம் மூன்று நாட்களின் பின்னர் ஒதுங்கியது
நாவிதன் வெளி சம்பலவத்த பாலத்தடியில்
பெருக்கெடுத்து ஓடிய நீரில் அடித்துச்
செல்லப்பட்ட நடேசபிள்ளை பிரதீபன்
 (வயது 18) இளைஞனின் சடலம்
வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.தைப்
 பொங்கலுக்காக கடந்த 11 ஆம் திகதி
 தனது தாயாருடன் ஆடைகளைக்
கொள்வனவு செய்ய இந்த இளைஞன்
 கல்முனைக்கு வந்துள்ளான். மீண்டும்
 நாவிதன்வெளிக்குச் செல்ல முடியாதளவு
 நீர் பெருக்கெடுக்கின்றது என்பதை அறிந்த
 இளைஞனும் தாயாரும் களுவாஞ்சிக்குடிக்கு
 வந்து வள்ளத்தில் செல்ல முடிவு செய்துள்ளனர்.
வள்ளத்தில் செல்வதானால் மண்டூரூடாக
 நாவிதன்வெளி செல்லும் சம்பலவத்த
 பாலத்தைக் கடக்க வேண்டும். இந்நிலையில்
 வள்ளத்தினால் பாலத்தைக் கடப்பதற்குரிய
சந்தர்ப்பம் கிடைக்காதபோது நீர்மட்டம்
குறைந்துள்ள பகுதியினால் நடந்து செல்ல
 எத்தனித்துள்ளனர். இவ்வேளையில் ஏற்பட்ட
வெள் ளப் பெருக்கினால் இவர் இழுத்துச்
செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த தினத்திலிருந்து மூன்று
தினங்களின் பின்னரே இவரது சடலம்
சம்பலவத்த பாலத்திற்கு அருகில்
கரையொதுங்கியுள்ளது.
124 

No comments:

Post a Comment