Tuesday, March 8, 2011

துப்பாக்கிச் சூடு பாடசாலை மாணவன் படுகாயம்

யாழ. தொண்டமானாறு பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத் தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வீதியில் இரணுவ வீரர ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான இளைஞர் அரியரட்ணம் அருள்தாஸ் என அவரது பெற்றோர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கடைக்குச் செல்வதாக தமது மகன் கூறிச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தமக்கு கூறியதனை அடுத்து அங்கு சென்ற போது அருள்தாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி காயம் அடைந்த நிலையில் வீதியில் விழுந்து கிடந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞரும் படைச் சிப்பாயும் துப்பாக்கியைப் பிடித்தவாறு இழுபறிப் பட்டதாகக அதனைப் பாரத்த சிலர் கூறியுள்ளனர் எனத் தெரியவருகிறது. எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பதனை உடனடியாக அறிய முடியவில்லை.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதியபின் பரீட்சை முடிவுகளுக்காக பார்த்திருந்த 17 வயதுடைய மாணவரே அருள்தாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment