இலங்கைத் தமிழர்கள் உட்பட 97 பேருடன் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற இரு படகுகளை ஆஸ்திரேலியக் கடற்படையினர் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே மடக்கிப் பிடித்தனர்.ஒரு படகில் 53 பயணிகளும் இரு சிப்பந்திகளும் இருந்தனர். அடுத்த படகில் 40 பயணிகளும் நான்கு சிப்பந்திகளும் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் தீவுக்கருகே கடலில் இந்த இரு படகுகளும் சென்றுகொண்டிருந்தபோது ஹிமாஸ் மைற்லண்ட் என்ற கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இவ்விரு படகுகளையும் கண்டுபிடித்தது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலுள்ள முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது

No comments:
Post a Comment