யாழ்ப்பாணத்தில் அனைத்து குடும்பங்களையும் பதிவு செய்யுமாறு இராணுவம் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துக் கிராம அலுவலர்களும் புகைப்படத்துடன் குடும்ப விபரங்களைப் பதிவு செய்ய வேண்டுமென 512 ஆவது இராணுவப்பிரிவின் கட்டளைத் தளபதி கிராம அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை மத்திய கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண கிராம அலுவலர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி அனைத்துக் கிராம அலுவலர்களும் தத்தமது பிரிவுகளில் உள்ள குடும்பங்களின் முழு விபரங்களையும் புகைப்படத்துடன் பதிவுகளை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இராணுவம் இரவு வேளைகளில் வீடு வீடாக சென்று குடும்பப்பதிவு அட்டைகளை காட்டுமாறு கடும் உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
இதேவேளை யாழ். குடாநாடு உட்பட வட பகுதிகளில் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுவரும் குடும்ப விபரப் பதிவுகள் நிறுத்தப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று வெள்ளிக்கிழமை காலை மத்திய கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண கிராம அலுவலர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி அனைத்துக் கிராம அலுவலர்களும் தத்தமது பிரிவுகளில் உள்ள குடும்பங்களின் முழு விபரங்களையும் புகைப்படத்துடன் பதிவுகளை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இராணுவம் இரவு வேளைகளில் வீடு வீடாக சென்று குடும்பப்பதிவு அட்டைகளை காட்டுமாறு கடும் உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
இதேவேளை யாழ். குடாநாடு உட்பட வட பகுதிகளில் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுவரும் குடும்ப விபரப் பதிவுகள் நிறுத்தப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment