Sunday, January 23, 2011

சிறுவயதுப் பிச்சைக்காரர்

யாழில் தற்போது சிறுவயதுப் பிச்சைக்காரர்

தற்போது சிறுவயதுப் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது.



யாழ் பேருந்துகளில் தம்மைப் பற்றிய துயரமான அறிமுகத்துடன் கூடிய துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த பின்பு அழகாக பாடி முடித்து விட்டு பயணிகள், மக்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிச் செல்கின்றனர் ஆனால் இப்பணம் இவர்களுக்கு உண்மையில் பயன்படுகின்றதா? அல்லது வேறுகும்பல்களுக்கு போய்ச் சேர்கின்றதா? என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது. கொழும்பில் பஸ்களில் பிட்சைக்காரர்களுக்கு தடை விதித்த உடன் அப்பிட்ச்சைகாரர்கள் யாழில் சிறு பிள்ளைகளை வைத்து தொழிலாக செய்கின்றனரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கின்றது எது எப்படியிருப்பினும் குழந்தைத் தொழிலாளர்களை பாதுகாத்து உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக உதவும் பொறுப்பில் உரியதரப்பினர் அக்கறை செலுத்த வேண்டும்.

மக்களோ கொழும்பில் விரட்ட எல்லோரும் யாழ் வந்துவிட்டார்கள் போல என முணு முணுக்கின்றனர்.

தகவல்- அனோராஜ்[124]

No comments:

Post a Comment